புர்ஜ் கலிபாவில் இன்று இரவு ஒளிர உள்ள மஹாத்மா புகைப்படம்
By: Nagaraj Fri, 02 Oct 2020 6:29:01 PM
புர்ஜ் கலிபாவில் ஒளிர உள்ள மஹாத்மா படம்... துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில், மஹாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படம் ஒளிரவிடப்பட உள்ளது.
இன்று இரவு 8:15 மணியளவில், காந்தியின் புகைப்படத்துடன், அவரது பொன்மொழிகள் இடம்பெறும் என துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதனை தூதரகத்தின் சமூக வலைதள பக்கத்தில் நேரடியாக காணலாம் எனவும் கூறியுள்ளது.
மஹாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தூதரகத்தில் தூய்மைப்பணியை
அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்திய வம்சாவளியினரின் உதவியுடன் 151
மரக்கன்றுகள் நடப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டி, ஓவியப்போட்டியும் நடந்தது.
Tags :
dubai |
students |
saplings |