Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன ராணுவ வீர்கள் ஈட்டிகளுடன் உள்ள புகைப்படம் வெளியீடு

சீன ராணுவ வீர்கள் ஈட்டிகளுடன் உள்ள புகைப்படம் வெளியீடு

By: Nagaraj Wed, 09 Sept 2020 2:49:59 PM

சீன ராணுவ வீர்கள் ஈட்டிகளுடன் உள்ள புகைப்படம் வெளியீடு

ஈட்டிகளுடன் சீன ராணுவ வீரர்கள்... இந்தியா- சீனா கட்டுப்பாடு எல்லைக் கோட்டுப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டது சீன ராணுவம்தான் என்று இந்திய ராணுவம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சீன ராணுவ வீரர்கள் கைகளில் ஈட்டிகளுடன் முன்னேறி வரும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்காக் ஏரிப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் கட்டுப்பாடு எல்லைக்கோட்டை மீறி அத்துமீறி நடந்து கொண்டு, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு சீன ராணுவமும் பதில் நடவடிக்கை எடுத்தது என்று நேற்று இரவு சீன ராணுவத்தின் மேற்குபடை கமாண்டர் ஹாங் சுலி குற்றம்சாட்டியிருந்தார்.

சீன ராணுவத்தின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்து, அதற்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளது. இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

chinese soldiers,satellite,photography,eastern ladakh,darts ,சீன வீரர்கள், சாட்டிலைட், புகைப்படம், கிழக்கு லடாக், ஈட்டிகள்

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை.

ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 7-ம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன.

நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. இவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் சீன ராணுவ வீரர்கள் கைகளில் ஈட்டிகளுடன் முன்னேறி வரும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கிழக்கு லடாக் பகுதியில் சீன வீரர்கள் கைகளில் கம்புகள், ஈட்டிகளுடன் அணி வகுத்து நிற்கின்றனர்.

Tags :