பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர் விமானம் விபத்தில் சிக்கி விமானி உயிரிழப்பு
By: Karunakaran Tue, 16 June 2020 1:02:44 PM
இங்கிலாந்து நாட்டின் சோபோஃக்ஸ் நகரில் இங்கிலாந்து நாட்டிற்கு சொந்தமான விமானப்படைத்தளம் உள்ளது. இங்கு நட்பு நாடான அமெரிக்காவின் போர் விமானங்களும், வீரர்களும் பணியில் உள்ளனர். தற்போது, அங்கு அமெரிக்க போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கியது.
அமெரிக்க விமானப்படை வீரர் அந்நாட்டுக்கு சொந்தமான எஃப் 15 ஈகில் ரக போர் விமானம் ஒன்றில் நேற்று வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். வானில் வட்டமிட்டப்படியே பறந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சிறுது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை அந்த போர் விமானம் இழந்தது.
அதன்பின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து அந்த போர் விமானத்தை தீவிரமாக தேடினர். இந்நிலையில், யார்க்ஷிரின் பகுதியில் இருந்து 74 நாட்டிக்கல் மையில் தொலைவில் போர் விமானம் விபத்துக்குள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க படைகள் அதனை கண்டுபிடித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தை ஓட்டி சென்ற அமெரிக்க விமானப்படை விமானி உயிரிழந்துவிட்டார். அவரது உடலை படையினர் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரனை நடைபெற்று வருவதாக அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.