போதைக்கு அடிமையான சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க திட்டம்
By: Nagaraj Mon, 14 Sept 2020 08:15:35 AM
புனர்வாழ்வளிக்க தீர்மானம்... போதைப்பொருளுக்கு அடிமையான 8000 சிறைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையான பாடசாலை மாணவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளது
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதற்காக உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தேசிய
அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்
லக்நாத் வெலகெதர இந்த உப குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞர்
விவகாரம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும், சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரும் உபகுழுவின் உறுப்பினர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.