பாட்னா – ராஞ்சிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டம்
By: Nagaraj Tue, 09 May 2023 11:28:11 AM
பாட்னா: வந்தே பாரத் ரயில் இயக்க திட்டம்... பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு, இம்மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இயக்கப்படவுள்ள இந்த ரயில், இரு ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை 6 மணி நேரத்தில் கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
தற்போது பாட்னா - ராஞ்சி வழித்தடத்தில் இயக்கப்படும், 'ஜன் சதாப்தி' என்ற விரைவு ரயில் 7 மணிநேரம், 55 நிமிடங்களில் இந்த வழித்தடத்தை கடந்து செல்கிறது.
பாட்னா- ராஞ்சி வந்தேபாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tags :
patna |
ranchi |