Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சேலம் மாவட்டத்தில் நாளை 34வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடல்

சேலம் மாவட்டத்தில் நாளை 34வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடல்

By: vaithegi Sat, 20 Aug 2022 7:12:21 PM

சேலம் மாவட்டத்தில் நாளை 34வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடல்

சேலம் : நாளை சேலம் மாவட்டத்தில் 34வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநகராட்சிகளில் 375 முகாம்கள் உட்பட மொத்தமாக 2,690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் இதில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தமாக 15,500க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிஷீல்டு 63,850 டோஸ்களும், கோவேக்ஸின் 22,230 டோஸ்களும், கோா்பிவாக்ஸ் 9,280 டோஸ்களும் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

vaccination camp,salem ,தடுப்பூசி முகாம்,சேலம்

இதையடுத்து இந்த முகாம் மூலமாக 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கை தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்தி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன் தடுப்பூசி செலுத்த வருபவர்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :