- வீடு›
- செய்திகள்›
- தானியங்கி பயணச் சீட்டு முறை முதல்கட்டமாக சென்னை ,மதுரை, கோவை போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடல்
தானியங்கி பயணச் சீட்டு முறை முதல்கட்டமாக சென்னை ,மதுரை, கோவை போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடல்
By: vaithegi Wed, 17 Aug 2022 09:31:04 AM
சென்னை: அரசு பஸ்களில் தானியங்கி பயணச் சீட்டு முறை கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் விரைவுப் பஸ்களின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கு காதித பயண சீட்டுதான் தற்போது வழங்கப்படுகிறது. .
இதனை அடுத்து இந்த நிலையில் அரசு பஸ்களில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல்கட்டமாக சென்னை ,மதுரை, கோவை போன்ற போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது
இதை தொடர்ந்து இதற்கான சர்வதேச ஒப்பந்த புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த தானியங்கி பயணச் சீட்டு முறையை மெட்ரோ ரயில் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு போன்றயவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் ஒன்று தகவல் வெளியாகியுள்ளது.