Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை வழங்க திட்டமிடல்

திருச்சிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை வழங்க திட்டமிடல்

By: vaithegi Sat, 12 Aug 2023 10:31:01 AM

திருச்சிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை வழங்க திட்டமிடல்

சென்னை: திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயந்து வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஆண்டிற்கு சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையத்தின் மூலமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதாக அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது திருச்சி விமான நிலையத்தை புது பொலிவுடன் விரிவாக்கம் செய்வதற்காக ரூ. 951 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தற்போதைக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு 76 வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

airline service,trichy,abroad , விமான சேவை,திருச்சி,வெளிநாடு


இந்நிலையில், நாளுக்கு நாள் உயரும் பயணிகளின் நலன் கருதி கூடுதலாக விமான சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, திருச்சி விமான நிலையத்திலிருந்து கொலம்பூருக்கு தினசரி 3 விமானங்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 2 விமானமும், சிங்கப்பூருக்கு கூடுதலாக 1 விமானமும்,

மேலும் இலங்கைக்கு கூடுதலாக 1 விமானமும், வியட்நாமிற்கு வாரத்திற்கு கூடுதலாக 3 விமானமும் என 31 விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த கூடுதல் விமான சேவை செப்டெம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :
|