சென்னையின் மெரினா கடற்கரையில் வைஃபை சேவை வழங்க திட்டமிடல்
By: vaithegi Thu, 29 Sept 2022 6:31:40 PM
சென்னை: வைஃபை சேவை வழங்க திட்டமிடல் .... மெரினா கடற்கரையில் வைஃபை வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெரினா மட்டுமல்ல சென்னை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமான பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகிய பகுதிகளிலும் வைபை வசதி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதை அடுத்து இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. அதனை தொடர்ந்து வைபை சேவை வழங்கும் நிறுவன அதிகாரிகளுடன் கடந்த 27-ம் தேதி இணைய சேவை வழங்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் வைபை வழங்கும் நிறுவனம் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில்,மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலிகள் மூலமாகச் சென்று கடலை ரசிக்க எதுவாக பாதை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.a