Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

By: Monisha Thu, 18 June 2020 1:36:03 PM

பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடைசி தேர்வை தவறவிட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் குறித்த என்று தகவல் வெளியானது.

பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

plus 2 examination,result,july,minister sengottaiyan,school ,பிளஸ்2 தேர்வு,முடிவு,ஜூலை,அமைச்சர் செங்கோட்டையன்,பள்ளி

பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெறுகிறது. சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|