Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக் கொடியேற்ற பிரதமர் அழைப்பு

நாளை முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக் கொடியேற்ற பிரதமர் அழைப்பு

By: Nagaraj Sat, 12 Aug 2023 5:20:48 PM

நாளை முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக் கொடியேற்ற பிரதமர் அழைப்பு

புதுடில்லி: தேசியக் கொடியேற்றுங்கள்... நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதை முன்னிட்டு கடந்த ஆண்டில் பிரதமர் மோடி ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.அதன்படி இந்த ஆண்டில் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்படி டிவிட்டரில் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :