Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புனே நகரத் தொகுதி பாஜக எம்.பி., மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புனே நகரத் தொகுதி பாஜக எம்.பி., மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

By: Nagaraj Wed, 29 Mar 2023 11:22:14 PM

புனே நகரத் தொகுதி பாஜக எம்.பி., மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடில்லி: பிரதமர் இரங்கல்... மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத் தொகுதி பா.ஜ.க. எம்பி கிரிஷ் பபத். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தீனானாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

bjp,condolences,constituency,death,girish babat,modi,mp,prime minister,pune ,இரங்கல், எம்.பி., கிரீஷ் பபத், தொகுதி, பாஜக, பிரதமர், புனே, மறைவு, மோடி

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் புனே சிட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவை புனே நகர மேயர் ஜெகதீஷ் முல்லிக் இன்று ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரீஷ் பபத் எளிமையான மற்றும் கடின உழைப்பாளி. சமுதாயத்திற்காக உழைத்தார்.

மராட்டியத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய அவர், புனே நகரத்தின் வளர்ச்சியை கனவு கண்டார். பிஜேபியை கட்டியெழுப்புவதில் ஆக்கப்பூர்வமாக உழைத்தவர். எம்.எல்.ஏ.,வாக இருந்த போது மக்கள் நலன் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அமைச்சராகவும், எம்.பி.,யாகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரது சிறப்பான பணியை மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|