பிரதமர் மோடி RBI ஆளுநருக்கு வாழ்த்து
By: vaithegi Sat, 02 Sept 2023 2:43:30 PM
இந்தியா : தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்த தாஸ் அவர்கள் பதவி வகித்து கொண்டு வருகிறார்.இதையடுத்து இவர் டிசம்பர் 2018 ஆம் ஆண்டு இந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.
அதன்பிறகு ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு சமயத்தில் நாட்டின் பொருளாதார நிதி நெருக்கடியை மிகவும் சாதூர்யமாக நிர்வகித்த பெருமை இவருக்கு உண்டு. மேலும் இவருக்கு லண்டனில் உள்ள மத்திய வங்கியால் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆளுநர் என்ற பட்டம் கடந்த ஜூன் மாதம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த க்ளோபஸ் ஃபைனான்ஸ் என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழானது உலகின் சிறந்த மத்திய வங்கி தலைவர்களின் பட்டியில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாசுக்கு முதலிடம் அளித்துவுள்ளது.
மேலும் சிறந்த செயல்பாடுகளுக்கான A+ என்ற முதன்மையான பிரிவில் சக்தி காந்ததாஸ் இடம்பெற்றுவுள்ளார். எனவே இதற்காக இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஆர்பிஐ ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.