Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

By: Nagaraj Sat, 20 May 2023 7:35:55 PM

ஹிரோஷிமாவில் காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

ஜப்பான்: காந்தி சிலையை திறந்தார்... ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வ பயணமாக சென்றுள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.

ஜி7 மாநாடு நடைபெற்று வரும் ஹிரோஷிமாவில் உள்ள அமைதி பூங்காவிற்கு சென்ற பிரதமர் மோடி, 42 அங்குல உயரம் கொண்ட காந்தி சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மற்றும் ஜப்பான் அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

gandhi,hiroshima,modi,prime minister,statue, ,காந்தி, சிலை, பிரதமர், மோடி, ஹிரோஷிமா

ஜப்பானில் காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி பேட்டி அளித்தார். ஜப்பானில் ஹிரோஷிமாவைப் பற்றிய ஒருவித பயம் இன்னும் உள்ளது என்று அவர் கூறினார்.

காந்தியின் பாதையில் உலக நன்மைக்காக அமைதி வழியில் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். காந்தி சிலை திறப்பு விழாவுக்கு முன்னதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Tags :
|
|
|