முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு
By: vaithegi Sat, 16 July 2022 07:57:02 AM
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக உயர்ந்துக்கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு பாதிப்படையும் முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனை அடுத்து மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் சென்று ஆய்வு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என தொடர் மக்கள் பணியாற்றி வந்த மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் உடல் சோர்வு இருந்ததால், பரிசோதனை செய்தபோது பாதிப்பு தெரியவந்தது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனை மு.க.ஸ்டாலினே தனது டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்து இருந்தார். வீட்டு தனிமையில் இருந்த மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். உடல்நலம் குறித்து விசாரித்த மோடிக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார். மேலும், தான் நன்கு குணமடைந்து வருவதாக மோடியிடம் அவர் தெரிவித்தார்.