Advertisement

21 தீவுகளுக்கு வீரர்களின் பெயரை சூட்டிய பிரதமர் மோடி

By: Nagaraj Mon, 23 Jan 2023 10:20:26 PM

21 தீவுகளுக்கு வீரர்களின் பெயரை சூட்டிய பிரதமர் மோடி

புது தில்லி: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத 21 தீவுகளுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டி வீரர்களை கவுரவித்தார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி வீரதீர தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த தினம் டெல்லியில் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், அதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத 21 தீவுகளுக்கு பெயர் சூட்டி வீரர்களை கவுரவித்தார்.

21 islands,andaman,modi,nicobar ,21 தீவுகள்,  அந்தமான், நிகோபர், மோடி

மிகப்பெரிய தீவு, முதல் பரம்வீர் சக்ரா விருது பெற்றவரின் நினைவாக பெயரிடப்பட்டது. இரண்டாவது பெரிய பெயரிடப்படாத தீவுக்கு இரண்டாவது பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும் சூட்டப்பட்டது. விக்ரம் பத்ரா, ராமசாமி பரமேஸ்வரன் மற்றும் மனோஜ் குமார் பாண்டே ஆகியோரின் பெயரால் தீவுகள் அழைக்கப்படுகின்றன.

பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் நினைவாக அடுத்தடுத்த அளவுள்ள தீவுகள் பெயரிடப்பட்டுள்ளன. சோம்நாத் தீவு, மனோஜ் பாண்டே தீவு, செத்ரபால் தீவு, சஞ்சய் தீவு முதலியவை பெயரிடப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Tags :
|