Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி

ஜி20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி

By: Nagaraj Tue, 15 Nov 2022 6:33:47 PM

ஜி20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி

புதுடில்லி: ஜி20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்றும் (15-ந்தேதி), நாளையும் 16-ந்தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார். ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.

உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் தொடர் பான 3 முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்க உள்ளார். ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.

china,france,germany,india,indonesia,italy,japan ,சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான்

அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதர நாடுகளின் தலைவர்களுக்கு மோடி இந்த மாநாட்டின் போது அழைப்பு விடுப்பார். அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபபர் இமானு வேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார். நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார்.

இது தவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியில் பிரதமர் மோடி 45 மணி நேரம் செலவிட இருக்கிறார். அங்கு அவர் சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இநதிய வம்சாவளியினர் பங்கேற் கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உளளார். மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16-ந்தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார்.

Tags :
|
|
|
|