Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரிபுராவில் இன்று மற்றும் 13 தேதி நடைபெறும் பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து உரையாற்றுகிறார்

திரிபுராவில் இன்று மற்றும் 13 தேதி நடைபெறும் பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து உரையாற்றுகிறார்

By: vaithegi Sat, 11 Feb 2023 10:20:32 AM

திரிபுராவில் இன்று மற்றும் 13 தேதி நடைபெறும் பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து உரையாற்றுகிறார்

அகர்தலா: பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் .... வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போன்று நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுவுள்ளது.

இந்த நிலையில் 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில், பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

prime minister narendra modi,tripura ,பிரதமர் நரேந்திர மோடி ,திரிபுரா

இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில், இன்று மற்றும் 13 போன்ற தேதிகளில் நடைபெறும் பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதையடுத்து இன்று மதியம் 12 மணியளவில் தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா பகுதியிலும், 3 மணிக்கு கோமதி என்ற பகுதியிலும் நடைபெறும் பேரணிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

Tags :