Advertisement

ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கட்சி விடுத்த கோரிக்கை

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:16:11 PM

ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கட்சி விடுத்த கோரிக்கை

கொழும்பு: ஜனாதிபதியிடம் கோரிக்கை... ராஜித சேனாரத்னவிற்கு அமைச்சுப் பதவி வழங்கினால், அதே மாவட்டத்தினைச் சேர்ந்த ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரோஹிதவுக்கு இன்றி ராஜிதவுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ministership,rajitha senaratne,president,demand,massive injustice ,அமைச்சுப் பதவி, ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி, கோரிக்கை, பாரிய அநீதி

ரோஹித அபேகுணவர்தன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர்.

இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன சுட்டிக் காட்டியுள்ளதாக தெரியவருகிறது.

Tags :
|