போலந்தை தாக்க வாக்னர் படைகள் முகாம் இட்டுள்ளதாக பிரதமர் தகவல்
By: Nagaraj Sun, 30 July 2023 6:54:11 PM
போலந்து: அச்சுறுத்தல் நீடிக்கிறது... போலந்தை தாக்க பெலாரசில் வாக்னர் படைகள் முகாம் இட்டுள்ளன. இதனால் அச்சுறுத்தல் நீடிப்பதாக போலந்து பிரதமர் அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவால் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட வாக்னர் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் நாட்டு எல்லையை நெருங்க முயற்சிப்பதாக போலந்து பிரதமர் மோராவைக்கி தெரிவித்துள்ளார்.
போலந்து மீது தாக்குதல் நடத்தும் திட்டமாக இது இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தப் படைவீரர்கள் பெலாரஸ் நாட்டின் குரோட்னோவில் முகாமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெலாரசின் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் போல வேடமிட்டு வாக்னர் வீரர்கள் போலந்துக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்றும் போலந்து பிரதமர் தெரிவித்தார்.
Tags :
poland |
border |