கியூபெக்கில் முகக்கவசம் அணியாதவரை கைது செய்த பொலிஸார்
By: Nagaraj Mon, 20 July 2020 2:32:30 PM
கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் இவற்றை புறந்தள்ளி கனடாவில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய விதியை பின்பற்றாமல் பொது வெளியில் வந்த நபரை பொலிசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம்
அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற
நாடுகளிலும் இந்த விதி கட்டாயமாக்கப்பட உள்ளது.
அந்த வகையில்,
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், கடந்த சனிக்கிழமை முதல் முகக்கவசம்
கட்டாயம் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இதனால் முகக்கவசம்
அணியாதவர்களை அணியும் படி, பொலிசார் கூறியுள்ளனர். அவர்களுக்கு அந்த
அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விதிமுறையை பின்பற்றாமல்
பொதுவெளியில் முகக்கவசம் இன்றி நடமாடியவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.