முன்னாள் ஜனாதிபதி இல்லத்திற்கு விசாரணைக்கு சென்ற பொலிஸ் பிரிவினர்
By: Nagaraj Wed, 26 Aug 2020 5:30:22 PM
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு இன்று காலை சென்றுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி
ஆணைக்குழுவில் இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை
ஆஜராகுமாறு கடந்த 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
தனக்கு குறித்த பொலிஸ் பிரிவில் ஆஜராக முடியாது எனவும் கொழும்பில்
அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்துக்
கொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவிற்கு
அறிவித்திருந்த நிலையில், ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் இன்று காலை
அவரின் இல்லத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.