நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை
By: Nagaraj Tue, 16 June 2020 9:06:46 PM
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை வீட்டில் நேற்று மதியம் அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை.
இந்த தற்கொலை வழக்கை தற்போது மும்பை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் உறுதியாக தெரிவித்து விட்டது.
உண்மையில்
அவரின் தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணமா அல்லது வேறு காரணம்
இருக்கிறதா என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது
சுஷாந்த் சிங் காதலி என்று கருதப்படும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை
செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர் . ரியா சுஷாந்த் சிங்கின் காதலி என்று
எங்கும் அவர் உறுதியாக கூறவில்லை.
ஆனால் இவர்கள் இருவரும் காதலில்
இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது. இவர்கள் இருவரும் நெருக்கமாக
இருக்கும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியானது. மும்பையில் உள்ள
காப்பர் மருத்துவமனையில் சுஷாந்த் சிங் உடல் இருந்தது. அங்கு ரியா வந்து
அங்கு ரியா வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.
அவர் வெள்ளை
உடையில் முகத்தை மூடிக்கொண்டு வந்தார். இவர் அங்கு வந்துவிட்டு சென்றதும்,
கண்ணீரோடு காரில் ஏறியதும் பெரிய வைரல் ஆகியுள்ளது. இவரிடம் போலீசார் நடத்த
திட்டமிட்டுள்ளனர்.