போலி 500 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர் போலீசில் சிக்கினார்
By: Nagaraj Fri, 28 Oct 2022 9:27:04 PM
திருவனந்தபுரம் : போலி நோட்டுகள்... கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. பணப் பரிமாற்றத்திற்காக ஒருவர் இங்கு வந்தார். இந்நிலையில், அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகளில் சந்தேகம் ஏற்பட்டது.
வங்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது அவை போலி நோட்டுகள் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காயங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலி நோட்டுகளை செலுத்திய நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர் பெயர் சுனில் தத் வயது 54, ஓட்டல் உரிமையாளர் அனஸ் வயது 46 என்பவர் பணம் கொடுத்ததாக ஓட்டுநர் தெரிவித்தார். மேலும் ரூ.25 ஆயிரம் செலுத்தி ரூ.50 ஆயிரத்தை பெற்றதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் சூனாத்தை சேர்ந்த அனஸை கைது செய்து விசாரித்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2
லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போலி 500 ரூபாய் நோட்டுகளை போலீசார்
பறிமுதல் செய்தனர். இந்த நோட்டுகள் எங்கு தயாரிக்கப்பட்டன என்பது குறித்து
போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே அந்த
நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதை
உறுதி செய்ய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறுதி செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு தேசிய
புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும்.