Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கைது செய்ய போலீசார் முயற்சி... நீதிமன்றத்தை நோக்கி ஓடிய இம்ரான் கட்சி முக்கிய பிரமுகர்

கைது செய்ய போலீசார் முயற்சி... நீதிமன்றத்தை நோக்கி ஓடிய இம்ரான் கட்சி முக்கிய பிரமுகர்

By: Nagaraj Wed, 17 May 2023 10:12:13 AM

கைது செய்ய போலீசார் முயற்சி... நீதிமன்றத்தை நோக்கி ஓடிய இம்ரான் கட்சி முக்கிய பிரமுகர்

பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடமிருந்து தப்புவதற்காக நீதிமன்றத்தை நோக்கி தலைதெறிக்க ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம், ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைதான போது, மக்களை வன்முறைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் இம்ரான் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ஃபவத் செளதிரிக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

imran khan,party,arrest,court,ran,riot ,
இம்ரான்கான், கட்சி, கைது, நீதிமன்றம், ஓடினார், பரபரப்பு

நீதிமன்றத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஃபவத் செளதிரியை வேறொரு வழக்கில் கைது செய்ய போலீசார் வந்தபோது, காரிலிருந்து இறங்கி மூச்சு இரைக்க அவர் நீதிமன்றத்தை நோக்கி ஜாமீன் வாங்க ஓடினார் ஃபவத் செளதிரி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இம்ரான்கான் கைதை தொடர்ந்து பாகிஸ்தானில் பெரும் வன்முறை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் கைது சம்பவங்கள் தங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இம்ரான்கானும் தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க முயற்சிகள் நடக்கிறது என்று தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|