Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்குவங்கத்தில் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு

மேற்குவங்கத்தில் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு

By: Nagaraj Sat, 08 July 2023 08:49:34 AM

மேற்குவங்கத்தில் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு

மேற்குவங்கம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல்... மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வன்முறை, கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதலும் வன்முறையும் நடைபெற்று வந்தன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டனா்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ளது. சுமாா் 5.67 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

local elections,voting today,west bengal,monitoring ,உள்ளாட்சித் தேர்தல், இன்று வாக்குப்பதிவு, மேற்கு வங்கம், கண்காணிப்பு

தோ்தலையொட்டி தொடா்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், அந்த மாநிலத்தில் வாக்குப் பதிவின்போது சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரா்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் ஊராட்சித் துறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னா், தற்போது இரண்டாவது முறையாக மத்திய படைகள் கண்காணிப்பின் கீழ், அந்த மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

Tags :