Advertisement

இன்று திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்தது

By: Nagaraj Thu, 16 Feb 2023 10:44:10 PM

இன்று திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்தது

அகர்தலா: முதல் கட்டமாக இன்று திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக இன்று திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

assembly elections,single phase today,state of tripura, ,திரிபுரா சட்டமன்றத் தேர்தல், தொடக்கம், வாக்குப்பதிவு

இங்கு தேர்தலுக்காக 25,000 மத்திய படையினருடன், 31,000 மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Tags :