Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விபத்து, ஒலி ,மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள் பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

விபத்து, ஒலி ,மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள் பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

By: vaithegi Sun, 23 Oct 2022 7:14:21 PM

விபத்து, ஒலி ,மாசற்ற  தீபாவளியை கொண்டாடுங்கள் பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் .... மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இதனை அடுத்து அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

pollution control board,diwali , மாசு கட்டுப்பாட்டு வாரியம் ,தீபாவளி

உச்ச நீதிமன்றம் தொரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது பற்றி போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

எனவே அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Tags :