Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகரத்தின் காற்றின் தரம் பற்றிய அறிக்கை ... மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிப்பு

சென்னை மாநகரத்தின் காற்றின் தரம் பற்றிய அறிக்கை ... மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிப்பு

By: vaithegi Tue, 25 Oct 2022 7:05:57 PM

சென்னை மாநகரத்தின் காற்றின் தரம்  பற்றிய அறிக்கை  ...   மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிப்பு

சென்னை : காற்றின் தரம் பற்றிய அறிக்கை ... இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2022) தீபாவளி பண்டிகை அன்று காலை 06.00 முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது.

இதனை அடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டுத் தாக்கத்தை கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும் ஒலி மாசு அளவையும் பெருநகர சென்னை மாநகரத்தின் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌக்கார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 7 இடங்களில் மேற்கொண்டது.

உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 14 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும் தீபாவளி அன்றும் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது. மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் (அதாவது) 18.10.2022 மற்றும் தீபாவளி பண்டிகையன்று 24.10.2022 மேற்கொள்ளப்பட்டது.

pollution control board,chennai ,மாசு கட்டுப்பாட்டு வாரியம்,சென்னை

அதன்படி வளசரவாக்கத்தில் 65.5 dB(A)ம் ஆக கண்டறியப்பட்டது, மேலும் தீபாவளி அன்று (அதாவது 24.10.2022) குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 66dB(A)ம், அதிகபட்ச அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 79.7 dB(A)ம் கண்டறியப்பட்டது.

மேற்கூறிய கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலிமாசுபாட்டின் அளவுகளை விட அதிக அளவாக உள்ளது என கண்டறியப்பட்டது. (பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A). தீபாவளி நாளான 24.10.2022 அன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6.00 மணி முதல் மறுநாள் 25.10.2022 காலை 6.00 மணி வரை, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 345 லிருந்து 786 வரை (மிக மோசமான அளவுகள்) என கண்டறியப்பட்டது (குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (345) அதிக அளவாக சௌக்கார்பேட்டையிலும் (786) கண்டிறியப்பட்டது).

இதையடுத்து இதற்கு முக்கிய காரணிகளாக, பொதுமக்கள் பெறுமளவில் பட்டாசுகளை வெடித்தும் வாண வெடிகளை பெரும் அளவுகளில் வெடித்ததினாலும் மேலும் காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக் குறைந்த வேகமும் ஆகும். மேற்கூறிய வானிலை அமைப்பு, பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை வான்வெளியில் விரவுதற்கு ஏதுவான சூழ்நிலை அல்ல. இதுவே, சென்னை மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2022 ஆம் ஆண்டின் தீபாவளி அன்று அதிகமானதற்குக் காரணம் ஆகும்.

Tags :