Advertisement

பொங்கல் பண்டிகை ... ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

By: vaithegi Sat, 14 Jan 2023 1:34:02 PM

பொங்கல் பண்டிகை  ...   ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து

சென்னை: பொங்கல் வாழ்த்து .... ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், "பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம்.

இதையடுத்து இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கல் என்று முழக்கமிட்டு பொங்கலோ மரியாதை செலுத்துவோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

greetings,pongal festival,governor ,வாழ்த்து,பொங்கல் பண்டிகை,ஆளுநர்

இதனை அடுத்து அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் , 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப, இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும், இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் என நெஞ்சார வாழ்த்தி,

தமிழக மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக வாழ எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :