Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 22ம் தேதி திறக்கப்படுகிறது போர்ச்சுக்கல், பிரான்ஸ் தரைவழி எல்லை; ஸ்பெயின் அறிவிப்பு

22ம் தேதி திறக்கப்படுகிறது போர்ச்சுக்கல், பிரான்ஸ் தரைவழி எல்லை; ஸ்பெயின் அறிவிப்பு

By: Nagaraj Fri, 05 June 2020 09:17:52 AM

22ம் தேதி திறக்கப்படுகிறது போர்ச்சுக்கல், பிரான்ஸ் தரைவழி எல்லை; ஸ்பெயின் அறிவிப்பு

பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டின் தரைவழி எல்லையை வரும் 22-ல் தேதியில் இருந்து திறக்க இருப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயினில் கொரோனா தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. இதனால் சர்வதேச எல்லைகளை மூடியது. மேலும் நாடு தழுவிய பொது ஊரடங்கை பிறப்பித்தது.

spain,territory,opening,portugal,france ,ஸ்பெயின், தரைவழி எல்லை, திறப்பு, போர்ச்சுகல், பிரான்ஸ்

கடந்த மாதம் மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

அந்த வகையில் ஜூன் 22-ந்தேதியில் இருந்து பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளுடன் உள்ள தரைவழி எல்லைகள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Tags :
|