வருமான வரிமுறைக்கு எதிராக தபால் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By: Nagaraj Thu, 09 Feb 2023 10:14:52 PM
கொழும்பு: தபால் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக, ஹட்டனிலுள்ள அனைத்து தபால் நிலைய ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) தபால் ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கறுப்புக் கொடிகளால் தபால் நிலைய வளாகத்தை அலங்கரித்தும் தபால் நிலையங்களை மூடியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பெறப்பட்ட கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது எனவும், வருமான வரியை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Tags :
worn |