இலங்கை பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு தேதி அறிவிப்பு
By: Nagaraj Tue, 16 June 2020 8:23:18 PM
தபால் மூலமான வாக்களிப்பு தேதி... கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இலங்கை பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் தபால் மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.
மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட
செயலாளர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள்
வாக்களிக்க முடியும்.
குறித்த தினங்களில் வாக்களிக்க
முடியாதவர்களுக்கு மேலதிகமாக ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளிலும்
வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற
தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.