Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் நடைபெறும் .... பள்ளிக்கல்வித்துறை

ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் நடைபெறும் .... பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Fri, 12 May 2023 10:03:28 AM

ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் நடைபெறும்    ....   பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.இதையடுத்து அதன்படி, 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

மாறுதல் கலந்தாய்வு தேதி பின் அறிவிக்கப்படும் எனவும் கடந்த 4-ம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

department of school education,discussion ,பள்ளிக்கல்வித்துறை ,கலந்தாய்வு

இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற மே 15-ம் முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு உ ள்ளன.

Tags :