Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர்கள் சங்கம் மனு தாக்கல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர்கள் சங்கம் மனு தாக்கல்

By: Nagaraj Mon, 18 May 2020 8:20:23 PM

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர்கள் சங்கம் மனு தாக்கல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஒரு தடைக்கல் போல் சிக்கல் எழுந்துள்ளது. ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் 10ம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் பிளஸ் 2 தேர்வுகள் மட்டும் முடிவடைந்த நிலையில், 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புக்கு எஞ்சிய தேர்வுகளையும் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

10th class,1st june,examination,problem,case,petition ,10ம் வகுப்பு, ஜுன் 1ம் தேதி, தேர்வு, சிக்கல், வழக்கு, மனு விசாரணை

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜுன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும் எஞ்சிய 11-ம் வகுப்புக்கான தேர்வு ஜுன் 2-ம் தேதியும் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் வலியுறுத்தினர்.

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜுனில் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதை தள்ளி வைக்கக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களே வழக்கு தொடராத நிலையில், இந்த மனுவை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

10th class,1st june,examination,problem,case,petition ,10ம் வகுப்பு, ஜுன் 1ம் தேதி, தேர்வு, சிக்கல், வழக்கு, மனு விசாரணை

இதையடுத்து, திட்டமிட்டபடி, வரும் ஜுன் 1-ம் தேதி முதல் தேர்வை நடத்துதவற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந் நிலையில், உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் வரும் ஜுன் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கக்கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் சங்கம் சார்பில் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுன் 1-ம் தேதி தேர்வு தொடங்க இருப்பதால், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Tags :
|