Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மயிலாடுதுறையில் நடை பெறயிருந்த வேலைவாய்ப்பு முகாம் தள்ளிவைப்பு

மயிலாடுதுறையில் நடை பெறயிருந்த வேலைவாய்ப்பு முகாம் தள்ளிவைப்பு

By: vaithegi Wed, 15 Nov 2023 1:33:16 PM

மயிலாடுதுறையில் நடை பெறயிருந்த வேலைவாய்ப்பு முகாம் தள்ளிவைப்பு

மயிலாடுதுறை: நவ.18 வேலைவாய்ப்பு முகாம் தள்ளிவைப்பு ... தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு மாவட்ட வாரியாக சனிக்கிழமைகளில் வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்து நடத்தி கொண்டு வருகிறது. அரசு நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை தவிர்த்து தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற நவம்பர் 18ஆம் தேதியான சனிக்கிழமை அன்று வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

employment camp,mayiladuthurai ,வேலைவாய்ப்பு முகாம் ,மயிலாடுதுறை

10 -ம் வகுப்பு முதல் அனைத்து கல்வி தகுதிகளையும் கொண்டவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நவம்பர் 15ஆம் தேதி முதல் கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளதால்

இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஆனது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :