Advertisement

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

By: vaithegi Wed, 12 Apr 2023 10:39:07 AM

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்தாண்டு நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு இடையே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததையடுத்து, மார்ச் 9-ம் தேதி 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் பின் அறிவித்தது.

adjournment,sri lanka ,ஒத்திவைப்பு,இலங்கை

இந்நிலையில் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான போதிய நிதியை அரசு ஒதுக்காததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இயக்குனர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலுக்கான நிதி வழங்குவதை அரசு உறுதி செய்த பின்னரே தேர்தலை நடத்துவதற்கான அடுத்த தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags :