Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்கள் அனுப்பி வைப்பது ஒத்தி வைப்பு

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்கள் அனுப்பி வைப்பது ஒத்தி வைப்பு

By: Nagaraj Thu, 28 May 2020 11:48:20 AM

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்கள் அனுப்பி வைப்பது ஒத்தி வைப்பு

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்களை அனுப்புவதை நாசா ஒத்திவைத்துள்ளது. காரணம் மோசமான வானிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்று அதிகாலை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல இருந்தனர். அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் செண்டர் காம்பளக்ஸ் 39 ஏ-ல் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது.

nasa,astronauts,bad weather,deferral ,நாசா, விண்வெளி வீரர்கள், மோசமான வானிலை, ஒத்தி வைப்பு

இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்வதாக இருந்தனர். இருவரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆராய்ச்சி செய்ய செல்கிறார்கள். அதிக அனுபவம் கொண்டோர் என்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை சுமந்து செல்லும் ராக்கெட் அதிகாலை 2.30 மணிக்கு விண்ணுக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பும் நாசா வீரர்களை அனுப்புவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த ராக்கெட் வரும் 30-ம் தேதி அதிகாலை விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|