Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் .. நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் .. நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைப்பு

By: vaithegi Sun, 04 Sept 2022 12:23:08 PM

ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் ..   நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வு வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தெரிவித்து இருந்தது.

இதை அடுத்து அதன்படி இந்த தேர்வு நடைபெற இன்னும் 7 நாட்களே உள்ளது. இந்நிலையில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக விண்ணப்பதாரர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அதாவது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.

teacher eligibility test,adjournment ,ஆசிரியர் தகுதித்தேர்வு ,ஒத்திவைப்பு

இதே போன்று, 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனால் விண்ணப்பதாரர்கள் இன்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த தேர்வை நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கான தேதி பின் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே இதனால் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு நடைபெறும் என்று காத்திருந்து தற்போது பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags :