Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாலையில் பள்ளம்... உயர் கோபுர விளக்கும் எரியலை... சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

சாலையில் பள்ளம்... உயர் கோபுர விளக்கும் எரியலை... சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 22 Nov 2022 7:29:58 PM

சாலையில் பள்ளம்... உயர் கோபுர விளக்கும் எரியலை... சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள பள்ளத்தில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

இந்த விபத்துகளை தடுப்பதற்கு போக்குவரத்து துறையும், காவல் துறையும் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை வைத்தும், ஸ்டிக்கர் ஒட்டியும் விபத்துக்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் அதிகப்படியாக இரவு நேரங்களில் விபத்துக்கள் நடைபெறுவதால், ஆஞ்சநேயர் கோவில் அருகே உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

high tower,electric light,repairs,accidents,motorists ,உயர் கோபுரம், மின் விளக்கு, பழுது நீக்கம், விபத்துக்கள், வாகன ஓட்டுனர்கள்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு பழுதாகி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுவுடன் உயர் கோபுர மின் விளக்கை பழுது பார்க்க கழற்றி சென்றுள்ளனர். ஆனால் ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இந்த உயர் கோபுர மின்விளக்கு பழுது நீக்கம் செய்து பொருத்தப்படவில்லை.


இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக பழுது நீக்கம் செய்து, பொருத்தி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags :