Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்சார எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாமில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ... மின்வாரியம்

மின்சார எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாமில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் ... மின்வாரியம்

By: vaithegi Tue, 29 Nov 2022 12:49:53 PM

மின்சார எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாமில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்   ...   மின்வாரியம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் பற்றி முறைகேடுகள் நடைபெறுவதால் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான சிறப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனை அடுத்து ஒருவர் எத்தனை வீடுகள் வைத்திருந்தாலும் அவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டாயம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

special camps,.priority ,சிறப்பு முகாம்கள்,.முன்னுரிமை

அது மட்டுமில்லாமல் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் எந்தவித பணமும் வசூலிக்க கூடாது எனவும், பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

மேலும் இணைப்பு பணியின்போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று கணினிகளை தயாராக வைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் அந்த சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :