மின் இணைப்பு – ஆதார் இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது
By: vaithegi Sun, 29 Jan 2023 8:53:57 PM
சென்னை: 2 நாட்கள் தான் உள்ளது .... தமிழ்நாட்டின் மின்சார வாரியம் மின் நுகர்வோர்கள், மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டது.
எனவே இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதலில் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டது.அதன் பின்னர் ஜனவரி 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் தமிழகத்தில் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவர்களும் ஆதாருடன் மின் இணைப்பை சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜனவரி 31 என்று முன் அறிவிக்கப்பட்ட கால அவகாசம் இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளதால் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இந்த பணியை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.