Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை

தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை

By: vaithegi Wed, 26 Apr 2023 3:05:45 PM

தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை


சென்னை: தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த முன்னறிவிப்புடன் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மாதம் தோறும் அட்டவணைப்படி முறையாக பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், மின் விபத்துகளை தவிர்க்க முடிகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாத ஆரம்பம் முதல் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததால் மின் விநியோகம் தடை செய்யப்படாமல் இருந்தது.

ஆனால் தற்போது பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டதால் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமையான நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

electricity,power supply ban ,மின்சாரம் , மின் விநியோகம் தடை

அதன்படி திண்டுக்கல்:சமுத்திராப்பட்டி கோட்டையூர், சிறுகுடி பூசாரிபட்டி, பூதகுடி பன்னியாமலை, உலுப்பகுடி காட்டுவே லம்பட்டி ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம் பட்டி, நத்தம், கோவில்பட்டி செல்லப்பநாயக்கன் பட்டி பொய்யாம்பட்டி மூங்கில்பட்டி ஊராளிபட்டி சேத்தூர், அரவங்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்., சாத்துமதுரை:அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.

காட்பாடி: காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருதம்பூட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள், சேலம்: மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர், ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி., கீழ்ப்பள்ளிபேட்டை: கண்ணமங்கலம், வரகூர் புதூர், வல்லம், அம்மாபாளையம் மற்றும் கீழ்பள்ளிபேட்டை சுற்றுவட்டார பகுதிகள் நாளை மின்சாரம் நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :