Advertisement

மதுரையில் நாளை (ஜூலை 16) மின்தடை

By: vaithegi Fri, 15 July 2022 12:03:19 PM

மதுரையில் நாளை (ஜூலை 16) மின்தடை

மதுரை: தமிழகத்தில் நாளை (ஜூலை 15) மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மேலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு மேலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை பெற்று வரும் மேலூர், டி.வள்ளாலப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, பதினெட்டாங்குடி, கொட்டக்குடி, ஆண்டிபட்டி, ஆட்டுக்குளம், சத்யபுரம், மேலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார். அதே போல மாட்டுத்தாவணி துணை மின்நிலையத்தை சேர்ந்த பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power outage,madurai ,மின்தடை,மதுரை

அதனால் , நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, SBI குடியிருப்பு பகுதிகள், காந்திநகர், மதிச்சியம், ஷெனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம்.

மேலும் கல்பாலம்ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில்தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ. கான்ரோடு, ஈ2.ஈ2 ரோடு, ஓ.சி.பி.எம் பள்ளி, செல்லூர், பாலம் ஸ்டேசன்ரோடு, கான்சாபுரம், BSNL, தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப் மற்றும் தமுக்கம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :