Advertisement

பெரம்பலூர் பகுதியில் நாளை மறுநாள் (ஜூலை 5) மின்தடை

By: vaithegi Sun, 03 July 2022 7:08:15 PM

பெரம்பலூர் பகுதியில்  நாளை மறுநாள் (ஜூலை 5) மின்தடை

பெரம்பலூர் : தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்ற விவரங்களையும் அம்மாவட்ட மின்வாரியம் தகவல் வெளியிடும்.அதன்படி நாளை மறு நாள் ஜூலை 5ல் பெரம்பலூர் பகுதியில் உள்ள மங்கூன் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது.

அதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடையாகும் என பெரம்பலூர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அவர்கள் கூற்றியுள்ளார்.

power outage,perambalur ,மின்தடை,பெரம்பலூர்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி,

மேலும், மேலப்புலியூர், மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :