Advertisement

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23) பவர் கட்

By: vaithegi Thu, 22 Sept 2022 7:42:28 PM

திருப்பூர் மாவட்டத்தில்  நாளை (செப்டம்பர் 23) பவர் கட்

திருப்பூர் : திருப்பூரில் நாளை (செப்டம்பர் 23)செப்டம்பர் 23ம் மினி விநியோகம் நிறுத்தம் ... தேதியான நாளை வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்டம் பொங்கலூா், எல்லப்பாளையம் புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

tirupur,power cut ,திருப்பூர் ,பவர் கட்

இதனை அடுத்து பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், கெங்கநாயக்கன்பாளையம், மாதப்பூா், பொங்கலூா், காட்டூா் ஆகிய பகுதிகளிலும்

மேலும் தொட்டம்பட்டி மற்றும் எல்லப்பாளையம் புதூா் துணைமின் நிலையத்தை சேர்ந்த ஒலப்பாளையம், காங்கேயம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளார்.

Tags :