Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின் விநியோகம் துண்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின் விநியோகம் துண்டிப்பு

By: vaithegi Tue, 26 July 2022 6:14:53 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில்  நாளை (ஜூலை 27) மின் விநியோகம் துண்டிப்பு

ராமநாதபுரம் : தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டு வருகின்றது. மின்சாரம் மின் பயனர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்குகிறது.

இந்நிலையில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஆகிய காரணத்தால் விபத்துக்கள் ஏற்பட்ட கூடும். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்விநியோகம் தடை அறிவிக்கப்பட்டு அந்த மின் கோளாறுகளை மின்வாரியம் சரி செய்கின்றனர்.

power distribution,ramanathapuram , மின் விநியோகம்,ராமநாதபுரம்

மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் முன்னதாகவே பொது மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் துணை மின்நிலையத்தில் நாளை (ஜூலை 27) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தேவிபட்டினம் பகுதிகளில் மின் மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தேவிபட்டினம் மின்நிலையத்தை சார்ந்த தேவிபட்டினம், சித்தார்கோட்டை, கழனிக்குடி, பெறுவயல், சிறுவயல், நரியனேந்தல் மரப்பாலம், இலந்தை கூட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு அரசு மின்வாரியத்துறை மற்றும் ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் ஆர் பாலமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :