Advertisement

நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

By: vaithegi Thu, 29 Dec 2022 1:37:31 PM

நாளை மறுநாள் இந்த பகுதிகளில்  மின்தடை அறிவிப்பு

சென்னை: டிசம்பர் 31 தேதியான நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் வழக்கமாக காலை 9 அல்லது 10 மணிக்கு துவங்கி பிற்பகலில் அல்லது மாலைக்குள் முடிந்து விடும்.

இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதையடுத்து இந்த நிலையில், நாளை மறுநாள் டிசம்பர் 31ம் தேதி அன்று சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

power supply,maintenance work ,மின்தடை ,பராமரிப்பு பணி

அதன் படி வத்திராயிருப்பு: பிலவக்கலனை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வட்ராப் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி,எஸ்.கொடிகுளம்:எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மேலும் ஒரத்தநாடு: ஒரத்தநாடு, புதூர், டவுன், 33KV ஃபீடர்கள் மட்டும்., ஏ.துலுக்கபட்டி: ஏ.துலுக்கபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் டிசம்பர் 31 தேதி மின் விநியோகம் தடை.

Tags :