Advertisement

கோவில்பட்டியில் நாளை (ஜூன் 24) மின்தடை

By: vaithegi Thu, 23 June 2022 2:33:41 PM

கோவில்பட்டியில்  நாளை (ஜூன் 24) மின்தடை

கோவில்பட்டி: மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் பல இருந்தாலும் அதில் மின்சாரமும் ஒன்றாக மாறிவிட்டது. மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் நிலையங்களில் ஏதேனும் பழுது அடைந்துள்ளதா, கோளாறு ஏற்படுகிறதா, வயர்களில் மரக்கிளைகள் உரசிக் கொண்டிருக்கிறதா என்று சரி பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில், கோவில்பட்டி மாவட்டத்திற்கு உட்பட்ட விஜயபுரி உப மின் நிலையத்தின் ஈராச்சி, விஜயபுரி, கசவன்குன்று, கொடுக்காம் பாறை ஆகிய பகுதிகளுக்கும்,எம். துரைச்சாமிபுரம் உப மின் நிலையத்தின் சிவஞானபுரம், வாகை தாவூர், சீனி வெள்ளாளபுரம், ஆசூர், கோபாலபுரம் ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உப மின் நிலையத்தின் சி. குமரெட்டியாபுரம் பகுதிக்கும்,

resistor,power station,electricity ,மின்தடை ,மின் நிலையங்கல் ,மின்சாரம்

நடராஜபுரம் தெரு, மூப்பன் பட்டி, வேலாயுதபுரம் மெயின் ரோடு, சங்கரலிங்கபுரம், இலுப்பையூரணி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும்,

எட்டயபுரம் உப-மின் நிலையத்தின் பவர்கிரிட் எதிரிலுள்ள வளர்மதி பெட்ரோல் நிலையம் பகுதி, சின்ன மலைக்குன்று, பங்காரு பட்டி, உசிலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் தரும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 23 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்திருக்கிறார்.

Tags :