Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூரில் உள்ள ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் ஜூலை 5ம் தேதி மின்தடை

திருப்பூரில் உள்ள ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் ஜூலை 5ம் தேதி மின்தடை

By: vaithegi Sat, 02 July 2022 7:37:15 PM

திருப்பூரில் உள்ள ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் ஜூலை 5ம் தேதி மின்தடை

தமிழகம்: தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. அத்துடன் மின்விபத்துகள் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மின்தடையை மின்வாரியம் முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது.

power outage,power board ,மின்தடை ,மின்வாரியம்

தற்போது திருப்பூரில் உள்ள ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் ஜூலை 5ம் தேதி அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை ஜூலை 5ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான செல்லிபாளையம், அய்யம்பாளையம், தாலிகட்டிபாளையம், கரைப்பாளையம், மேட்டுக்கடை, மோளக்கவுண்டன்பாளையம், சின்னியகவுண்டன்பாளையம், களவாய்பாளையம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆா்எஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஜூலை 5ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழக்கம் போல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :